News

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மகாராணி !

Published

on

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் விஜய்சேதுபதியின் 50வது படம் சுமார் ரூ.100 காடிக்கு மேல் இப்படம் வசூல் செய்தது.

இந்த நிலையில் நித்திலன் சுவாமிநாதன் தன் அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இவர் அடுத்து இயக்கும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக வந்த தகவல் உறுதி என்றும் இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு மகாராணி என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

 

Trending

Exit mobile version