Connect with us
 

News

கல்வி அறக்கட்டளைக்கு 1 கோடி நன்கொடை அளித்த லைகா நிறுவனம் !

Published

on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் கடந்த 30-ம் தேதி வெளியாக பிரம்மாண்ட வெற்றி பெற்றது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்.

திரையரங்கில் மட்டும் இப்படம் இதுவரைக்கும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் சாதனை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் இதுவாகும்.

இந்த நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குவினர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட படக்குழு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் மற்றும் சுபாஷ்கரன் இயக்குநர் மணிரத்னம் இருவரும் இணைந்து கல்வி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ரூ.1கோடியை கல்கி அவர்களின் மகன் கல்கி ராஜேச்ந்திரனிடம் வழங்கினர்.