Connect with us
 

News

12 பாடல்களுடன் வெளியாகும் பொன்னியின் செல்வன் !

Published

on

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரங்குகள் அமைக்காமல் மலை மற்றும் வனப்பகுதிகளில் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகிறது. முதல் பாகத்தை வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், அனிருத்த பிரம்மராயரக பிரபு, ஆழ்வார்க்கடியானாக ஜெயராம், கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, குந்தவையாக திரிஷா, நந்தினியான ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, குடந்தை ஜோதிடராக மோகன்ராம், சோமன் சாம்பவனாக ரியாஸ்கான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆனாலும் இந்த கதாப்பாத்திரங்களை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் 6 பாடல்களும் இரண்டாம் பாகத்தில் 6 பாடல்களும் என மொத்தமாக 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.