News

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக திருமனத்தை தள்ளி வைத்த தனுஷ் பட நடிகை !

Published

on

தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மெஹ்ரின். இதை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படங்களில் நடித்தார்.

மெஹ்ரினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயாதர்த்தம் முடிந்தது. அரியான மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை மணக்கிறார். ஓரிரு மாதங்களில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந்நிலையில் மெஹ்ரினுக்கும் அவரது அம்மாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா காரணமாக திருமணத்தை தள்ளி வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மெஹ்ரின் கூறும்போது:- கொரோனா பரல் அதிகமாகவுள்ளது. இந்த சூழலில் திருமணத்தை நடத்துவது பாதுகாப்பானது இல்லை. எனவே திருமனத்தை அடுத்த ஆண்டு தள்ளி வைக்க யோசித்து வருகிறோம் என்றார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு வில மெஹ்ரின் முடிவு செய்யுள்ளார். இதனால் எந்தவொரு புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.

Trending

Exit mobile version