News

மிருகா பட நடிகை போதை வழக்கில் மும்பையில் கைது !

Published

on

மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அங்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது பெண் ஒருவர் ஆண் நண்பருடன் சந்தேகப்படும் படியாக அங்குள்ள அறைக்கு சென்றதை கண்டனர். இதனையடுத்து போலீசார் அந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த தெலுங்கு பட நடிகையான நைய்ரா ஷா என்பவர் சிகரெட்டில் சரஸ் என்ற போதைபொருளை புகைத்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் நடிகை நைய்ரா ஷா மற்றும் ஆண் நண்பரை பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டரு உறுதியானது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து கோட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு நடிகை உள்பட 2 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

ஏற்கனவே இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையுடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகை போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி இருப்பது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட நடிகை நைய்ரா ஷா ஶ்ரீகாந்த மற்றும் ராய் லட்சுமி நடித்த மிருகா படத்தில் ராய் லட்சுமி தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version