News

இதையெல்லாம் பார்க்கும் போது என் மனது வலிக்கிறது – சமந்தா !

Published

on

தமிழ், தெலுங்கு மொழிகளில் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவரின் மார்கெட் வீழ்ந்து விடும் என்ற்று பலரும் நினைத்தனர். ஆனால் தற்போதும் இவர் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தி பேமிடி மேன் 2 என்ற வெப் தொடரில் நடித்தார். இந்த தொடருக்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதே சமயம் பிறமொழிகளில் சமந்தாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி தள்ளினார்கள்.

இதை பற்றி சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சமூக வலை தளங்களில் வரும் விமர்சனங்கள், சீண்டல்களை எதிர்கொள்வது சாதாரண விஷயம் அல்ல. யாரொ ஒரு சொல்கிறார் சொல்கிறார்கள் என்று கடந்தும் செல்ல முடியாது. என் நடிப்பை பேசினால் பரவாயில்லை என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும்போதுதான் மனம் மிகவும் வலிக்கிறது.

சினிமாவில் பல ஆண்டுகளாக இருப்பதால் இதை கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. தன்னம்பிக்கைலெயே இவற்றையெல்லாம் சமாளித்து வருகிறேன் என்று கூறினார் சமந்தா.

Trending

Exit mobile version