News

நான் நடிகையானதுக்கு முழு காரணமும் என் தங்கைதான் – ஸ்வாதகா !

Published

on

வித்தார்த் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் டர்ட்டி பொண்டாட்டி, பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி, ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படிப் பார்க்காதடி, வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர் பாகை ஸ்வாகதா.

சமீபத்தில் இவர் இசையமைத்து பாடி நடித்து வெளியிட்ட ஆல்பம் பாடல் அடியாத்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்றது.

இந்நிலையில் ஸ்வாதகா காயல் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ளார். ஜே.ஸ்டுடியோஸ் ஜே.சு.சுந்தரமாறன் தயாரிக்க தமயந்தி இப்படத்தை இயக்கவுள்ளார்.

சாதி மறுப்பு திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால் பெங்களுக்கு வரும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படமாக உருவாகவுள்ளது. கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளங்கனி, மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று முழுவதுமாக நிறைவு பெற்றுவிட்டது.

இது பற்றி ஸ்வாதகா கூறியதாவது:- நான் நடிக்க வந்ததற்கு காரணமே என் தங்கை. அவள்தான் என்னை தொடர்ந்து நடிக்க சொல்லு வற்புறுத்தி நடிப்பின் மேல் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினாள். நடிப்பு திறமையை வளர்த்துக் கொள்ள என்னை தியேட்டர் ஆர்ட்சில் நடிப்பு பயிற்சிகு அனுப்பியதும் அவள்தான். இந்த படத்தை தவிர ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறேன் என்றார் ஸ்வாதகா.

Trending

Exit mobile version