News

விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை ஓடி வந்து உதைத்த மர்ம நபர் !

Published

on

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! சினிமா பின்புலம் இல்லாமல் கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்த நபர் என்பதால் இவரை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி இருக்கையில் சமீப காலங்களாக சுமார் படங்களை மட்டுமே கொடுத்து வருவதாக இவரது ரசிகர்கள் உட்பட சினிமா விரும்பிகளும் மன வருத்தத்தில் உள்ளனராம். ஏனெனில் இவர் நடித்து வெளியான லாபம், ஆணாபெல் சேதுபதி, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் சுத்தமாக ஓடவில்லை என்பதால் வெறும் பணத்திற்காகவும் மற்றும் படம் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடித்து வருகிறார் என்ற குற்ற சாட்டும் இவர் மேல் உள்ளது.

அது மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் உலக புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இத்தகைய நிலையில் அவ்வப்போது இவர் அரசியல் பேசி வருவதும் அனைவரும் அறிந்த ஒன்றே.

இவ்வாறு இருக்கையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தி திணிப்பு பற்றி இவர் கூறிய கருத்துக்கு பல தரப்பட்ட மக்களிடம் இருந்து எதிர்ப்பு அலைகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் சென்று கொண்டிருந்த இவரை மர்ம நபர் ஒருவர் ஓடி வந்து உதைக்கும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் இணையத்தில் தீப்போல பரவி வருகிறது.

Trending

Exit mobile version