News

பிரிவுக்கான காரணத்தை சொல்லி சமந்தாவை சீண்டிய நாகசைதன்யா !

Published

on

காதல் திருமணம் செய்த நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து செய்து கொண்டனர். மூன்று வருட காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்த விவாகரத்து ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்துக்குள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணத்துக்கு பின்னர் சமந்தா அரைகுறை உடையில் கவர்ச்சியாகவும் படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாகவும் நடித்ததுதான் நாகசைதன்யா குடும்பட்டிற்கு பிடிக்கவில்லை என்றும் இதனால்தான் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அது விவாகரத்து வரைக்கும் சென்றதாகவும் அப்போது கூறப்பட்டது.

இதனையடுத்து தன்மீது அவதூறு பரப்புவதாக சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா வழக்கும் தொடர்ந்தார். விவாகரத்து க்கு பின்னர் இதுவரை கருத்து தெரிவிக்காமலே இருவரும் இருந்து வந்த நிலையில் தற்போது நாகசைதன்யா அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது:-

நான் என் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்தும்போது எங்கள் குடும்பத்தையும் எங்களின் குடும்ப கெளரவத்தையும் பாதிக்ககூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் வேடங்களில் நடிக்க மாட்டென் என்று தெரிவித்தார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது சமந்தா திருமணத்திற்கு பின்னர் சர்ச்சையான கதாப்பாத்திர தேர்வுதான் இவர்களின் விவாகரத்துக்கு காரணமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்தெ பேட்டியின் மூலம் சமந்தாவை மறைமுகமாக நாகசைதன்யா குறை கூறி சீண்டியிருப்பதாகவும் தெலுங்கு பல உலகில் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.

Trending

Exit mobile version