News

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை நாகினி புகழ் நடிகர் கைது !

Published

on

2013-ம் ஆண்டில் வெளியான தில் த் கி நசர் கூப்சூரத் என்ற இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் பேர்ல் வி பூரி. இதன் பின்னர் பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். நாகினி மூன்றாம் பாகத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தன் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி வி பூரியும் அவர்களது நண்பர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியும் அவரது தாயும் அளித்த புகாரின் பேரில் வி பூரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் நாகினி சீரியலில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை அனிதா ஹசானந்தனி எனக்கு வி பூரியை நன்றாக தெரியும் இது போன்ற செயல்களில் ஒரு போதும் அவர் ஈடுபடுபவர் அல்ல. உண்மை விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version