Connect with us
 

News

முதன் முறையாக வக்கீலாக நடிக்கும் நயன்தாரா !

Published

on

நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நிழல் என்ற மலையாள திரைப்படம். தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

இதில் நெற்றிக்கண் திரைப்படம் டப்பிங் பணிகள் முடிந்து விரைவில் வெளியாகயுள்ளது. இப்படதில் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். அண்ணாத்த படத்திலும் அனைத்து காட்சிகளிலும் நடித்து முடித்து விட்டாராம் நயன்தாரா.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இவரின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிவருகிறார். இதில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதனையடுத்து மேலும் 3 புதிய படங்களில் நடிக்கவிருக்கிறார். அதில் ஒரு படம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை. தமிழில் தயாராகும் இந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.