Connect with us
 

News

கேரளா சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி !

Published

on

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் Nayanthara இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 9-ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த உடனே நேற்று இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.

இதையடுத்து, தனியார் ஓட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா, எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி, தொடர்ந்து உங்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், புதுமணத் தம்பதிகள் நயன்தாராவின் பெற்றோரை சந்திக்க கொச்சிக்கு சென்றுள்ளனர்.உடல்நலக் குறைவு காரணமாக அவர்கள் 2 பேரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பெற்றோரிடம் ஆசி பெறுவதற்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். பின்னர் பெற்றோரை சந்தித்து 2 பேரும் ஆசி வாங்கினர். சில நாட்கள் 2 பேரும் கேரளாவில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.