News

கொடுக்கும் பணத்திற்கும் வட்டி வசூல் செய்யும் ஓடிடி நிறுவனங்கள் – சீனுராமசாமி கண்டனம்

Published

on

சினிமா தோன்றிய காலத்திலிருந்து திரைப்படங்கள் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகிவருகிறது. சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக புதிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களும் குறிப்பிட்ட சில காலத்திற்கு பின்னர் ஓடிடி தளங்களில் வெளியாகிவருகிறது. இதற்காக பட தயாரிப்பாளர்களுக்கு ஒடிடி நிறுவனங்கள் அட்வான்ஸ் கொடுக்கின்றன.

ஆனால் சில காரணங்களால் பட வெளியீடு தள்ளி போனால் கொடுத்த அட்வான்ஸ் படத்திற்கு ஓடிடி நிறுவனங்கள் வட்டி வசூலிக்கிறது என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் வளர்ந்தால்தான் ஒடிடி நிறுவனங்களுக்கு பெருமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version