Connect with us
 

News

மலையாளம், தமில் மொழிகளில் வெளியாகும் கோல்டு !

Published

on

நேரம், பிரேமம் என்ற படங்களின் மூலன் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் வெளியாகி 7 வருடங்கள் கழித்து இவரின் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் கோல்டு. இப்படம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியவுள்ளது படக்குழு.

ஓணம் பண்டிகைக்கே இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாத காணத்தால் இப்படம் வெளியாகமால் தள்ளிப்போனது.

நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா இருவரும் நடித்துள்ளனர். நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளால் இவருக்கு பல கோடி தமிழ் ரசிகர்கள் உள்ளதால் இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியுட உள்ளனர் படக்குழு.

நடிகர் பிரித்திவிராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.