Connect with us
 

News

பிரபாஸ் வில்லனாக தமிழில் அறிமுகமாகும் தென் கொரிய நடிகர் !

Published

on

இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் தனது 25-வது படமான ஸ்பிரிட் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் சந்தீப் ரெட்டி படங்கள் மீது எப்போதும் பல எதிர்ப்புகள் வந்தாலும் இவர் படங்கள் வசூலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான அனிமல் படமும் அப்படித்தான்.

தற்போது இவர் பிரபாஸ் நடிக்கவுள்ள ஸ்பிரிட் படம் பற்றி கூறும் போது இப்படம் சுமார் ரூ.300 கோடிக்கு மேல் வசூலிக்கும் இப்படத்தில் பிரபாஸ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். திரைக்கதை பணிகள் பெரும்பகுதி முடிவடைந்து விட்டது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க தென் கொரியாவில் மிகவும் பிரபலமான நடிகரான மா டாங் சியோக் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவரின் அதிரடியான ஆக்சன் படங்களுக்கு உலகமெங்கும் சினிமா ரசிகர்கள் உள்ளனர்.

இப்படத்தின் கதை நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் பிரபாஸ் கொடூரமான கேங்ஸ்டரானா தென்கொரியாவை சேர்ந்த வில்லனை தேடி கண்டுபிடிப்பதே படத்தின் கதை என்று கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இவை எல்லாம் உறுதிப்படுத்தப்படாத செய்திகள்தான் இருந்தாலும் படக்குழு விரைவில் இதை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.