News

பிரபாஸின் ராதே ஷ்யாம் வெளியீட்டு தேதி மாற்றம் !

Published

on

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்து வரும் திரைப்படம் ராதே ஷ்யாம். இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கி வரும் இப்படம் ரூபாய்.350 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஐஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

ராதே ஷ்யாம் படம் ஜீலை 30-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு தியேட்டர்கள் மூடப்பட்டதால் வெளியீடு தள்ளி போனது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது படக்குழு மாற்றியுள்ளது. அதன் படி அடுத்த வருடம் ஜனவரி 14-ம் தேதி பொங்கள் பண்டிகையையொட்டி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version