Connect with us
 

News

எனக்கு சமந்தாவுக்கு தொடர்பா பிரீதம் ஜூகல்கர் விளக்கம் !

Published

on

நடிகை சமந்தாவும் நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் கடந்த வாரம் இவர்கள் இருவரும் விவாகரத்தும் செய்தனர். இவர்களின் இந்த பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜூகல்கர் என்று தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியானது.

பிரீதம் ஜூகல்கருடன் சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வளைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரீதம் ஜூகல்கரை அவதூறாக திட்டியும் மிரட்டல் விடுத்தும் நாகசைதன்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து பிரீதம் ஜூகல்கர் அளித்துள்ள பேட்டியில் எனக்கும் சமந்தாவுக்கும் தவறான தொடர்பு உள்ளது என்றும் இதனாலேயே சமந்தாவுக்கும் நாகசைதன்யாவும் பிரிவு ஏற்பட்டுள்ளது என்றும் தவறான தகவலை பரப்பியுள்ளனர். இதன் மூலம் சமந்தாவை அவதூறு செய்துள்ளனர்.

சமந்தாவை நான் என் சகோதரியாகவே பார்க்கிறேன் அவரை நான் சகோதரி என்றுதான் அழைக்கிறேன் எங்களுக்குள் தவறான எந்த ஒரு தொடர்ப்பும் இல்லை என்பது நாகசைதன்யாவுக்கும் தெரியும் ஆனாலும் ஏன் அவர் அமைதியாக இருக்கிறார் என்பது தெரியவில்லை அது எனக்கு மிகவும் வருத்தமாகவும் உள்ளது.

என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது நாகசைதன்யா ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் நான் புகார் அளித்துள்ளேன் என்று கூறினார்.