Connect with us
 

News

ரச்சிதா மகாலட்சுமி பொய் புகாருக்கு தயாரிப்பாளர் விளக்கம் !

Published

on

தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார் தயாரித்து இயக்கி வரும் திரைப்படம் பயர். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ், சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பயர் படத்தில் தனக்கு சம்பளம் தரவில்லை என்று பாலாஜி முருகதாஸ் புகார் ஒன்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அந்த படத்தில் நடித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமியும் தனக்கும் சம்பளம் தரவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

ரச்சிதா மகாலட்சுமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார் “ நீங்கள் நடித்ததைத்தான் உங்கள் பிறந்தநாளுக்கு கிளிம்ஸ் ஆக வெளியிட்டு இருக்கிறோம் படம் வெளியே வரும் போது நீங்கள் நடித்த காட்சிகள் எல்லாம் வெளியில் வரும்.

நீங்கள் என்னிடம் சம்பளம் வாங்கிவிட்டுத்தான் நடித்தீர்கள் இனாமாக ஒன்றும் நடித்து கொடுக்கவில்லை. நீங்கள் சம்பளம் வாங்கியதற்கு ஆதாரம் என் கையில்தான் இருக்கிறது. அதனால் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள் தேவைப்பட்டால் அனைத்தையும் நான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ள் வேண்டிய நிலை வரும் என கூறியுள்ளார்.