News

பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி கொடுக்கும் ராகவா லாரன்ஸ் !

Published

on

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமல்ல திரையுலகினர் என அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது. இப்படம் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கதையில் போலீஸ் அதிகாரிகளால் அடித்து கொலை செய்யப்பட்ட ராஜாக்கண்ணு என்பவர் வாழ்ந்தார் என்றும் அவர் புகைப்படம் எங்கே என்றும் ராஜாகண்ணு மனைவி பார்வதி அம்மாள் எங்கே என்றும் பலர் கேள்வி கேட்ட நிலையில் பார்வதி அம்மாள் தற்போது உயிருடந்தான் இருக்கிறார் என்று நிரூபனமாகியுள்ளது.

மேலும் பார்வதி அம்மாளின் வாழ்க்கை தனக்கு தெரியும்படி செய்த ஊடகங்களுக்கு மிக்க நன்று என்றும் தெரிவித்துள்ளார். மிக விரைவில் பார்வதி அம்மாளுக்கு வீடுகட்டி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய லாரன்ஸ் 28 வருடங்களுக்கு முன் நடந்த கொடூரமான ஒரு துயர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுவதும் பேசும்பொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும் ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய திரு.சூர்யா மற்றும் திருமதி.ஜோதிகா அவர்களுக்கும் இயக்குநர் திரு.த.செ.ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும் என தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version