News

மீண்டும் தொடங்கும் சினிமா படப்பிடிப்புகள் !

Published

on

கொரோனா 2-வது அலை ஊரடங்கு காரணமாக 50-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் படங்களில் டப்பிங் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தற்போது வெளியான அறிவிப்பில் 100 பேரை வைத்து படப்பிடிப்புகளை நடத்தலாம் படப்பிடிப்புகளை என்று அரசு தளர்வு அறிவித்துள்ளதால் மீண்டும் படப்பிடிப்புக்கள் தொடங்கவுள்ளன.

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் அனைத்து காட்சிகளிலும் நடித்து முடித்துவிட்டார். மற்ற நடிகர் நடிகைகள் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கவுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.

விஜய்யின் 65-வது படப்பிடிப்பை சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் நடத்தவுள்ளனர். இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுவுள்ளது. பாடல் காட்சியை இங்கு படமாக்கவுள்ளர். ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்தி முடித்தனர். இந்த படத்தின் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். பீஸ்ட் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்குமாரின் வலிமை படத்தில் விடுபட்ட காட்சிகளை ஐதராபாத்தில் மீண்டும் படமாக்க தயாராகி வருகிறார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படத்தின் படப்பிடிப்பி பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடந்த நிலையில் ஊரடங்கினால் நிறுத்தப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பையும் மீண்டும் தொடங்குகிறார்கள். படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

விஷாலின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஐதராபாத்தில் தொடங்கிவுள்ளது. கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்டோரும் படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளனர்.

Trending

Exit mobile version