News

ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம் விஜய் தொடர்ந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் !

Published

on

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் தளபதி விஜய். கடந்த 2012-ம் வருடம் இங்கிலாந்து நாட்டிலிருந்து இறுக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து.

உச்ச நடிகர் விஜய் போன்றவர்கள் திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் விஜய்க்கு எதிராக சிலரும் ஆதராவாக பலரும் கருத்துக்களை சமூக வளைத்தளங்களில் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தளபதி விஜய் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகளான எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா இருவரும் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது வரி தொடர்பாக மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Trending

Exit mobile version