Connect with us
 

News

ஆர்.ஆர்.ஆர். படத்துக்கு ஆந்திர அரசு வழங்கிய சிறப்பு சலுகை !

Published

on

பிரம்மாண இயக்குநர் எஸ்எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இம்மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்தநிலையில் சமீபத்தில் ஆந்திர அரசு திரையரங்குகளில் கட்டணம் குறித்த உத்தரவு பிறப்பித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படித்தியுள்ளது. அதாவது திரையரங்குகளில் தாறுமாறாக கட்டணங்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த உத்தரவை விதித்தது ஆந்திர அரசு.

ஆனால் இந்த உத்தரவு திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்கு சிறப்பு சலுமையாக படம் வெளியாகி முதல் பத்து நாட்களுக்கு திரையரங்கு கட்டணத்தை திரையரங்கு உரிமையாளர்களே நிர்ணயித்துக்கொள்ளளாம் என்று ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த தகவல் கேட்ட ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடந்துள்ளனர்.