Connect with us
 

News

போலீஸ் அதிகாரிகளை பெருமை படுத்த ராஜமவுலி எடுக்கும் குறும்படம் !

Published

on

பாகுபலி என்கிற பிரம்மாண்ட திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது ஆர்.ஆர்.ஆர். எனும் அடுத்த பிரம்மாண்ட படத்தை உருவாக்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் ராஜமவுலி ஒரு குறுப்படத்தை இயக்கவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளாது. இந்த கொரோனா போரிடர் காலத்தில் காவல்துறையின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் சொல்லும் விதமாக 20 நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.

இது சம்பந்தமாக தெலுங்கான காவல்துறை அதிகாரிகளையும் அவர் சந்தித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்பை தொடங்குவதற்குள் குறும்படத்தை முடிக்கும் முனைப்பில் ராஜமவுலி இருப்பதாக கூறப்படுகிறது.