News

கதை திரைக்கதையை தயார் செய்யாமல் போனால் இப்படித்தான் இருக்கும் – எஸ்.ஏ.சந்திரசேகர் !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் பீஸ்ட். வெளியான நாள் முதல் கலவையான விமர்சனம் கிடைத்தது.

இந்த நிலையில் இப்படத்தின் தோல்விக்கான காரணத்தை கூறியுள்ளார் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு ஹீரோவின் கால்ஷீட் கிடைத்து விட்டதும் உடனடியாக கதை திரைக்கதையை தயார் செய்யாமல் படப்பிடிப்புக்கு எந்த ஒரு இயக்குநர் செல்லக்கூடாது என்றும் ஒரு கதையை எப்படி எல்லாம் படமாக்க கூடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் பீஸ்ட் திரைப்படம் என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச் அளாவில் உள்ள ஒரு விஷயத்தை சொல்லவேண்டும் என்றால் அதை பற்றி நன்கு தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் இயக்குநர். படத்தில் வரும் ராணுவ குறித்த காட்சியில் எந்தவித புரிதலும் இல்லாமல் படமாக்கியுள்ளார் இயக்குநர். ஒரு ரசிகனாக பீஸ்ட் படம் எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை பீஸ்ட் படத்தில் ஹீரோ, பாடல், சண்டைக்காட்சி, எடிட்டிங், பிரம்மாண்ட தயாரிப்பு இருந்தும் இயக்குநர் மட்டும் இல்லாமல் போய் விட்டது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version