News

சமந்தாவும் நானும் பிரிகிறோம் நாகசைதன்யா உருக்கமான பதிவு !

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை சமந்தா இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் சமந்தா பல படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த ஒரு வருடமாக கணவன் – மனைவி இருவருக்கும் இடையில் மனக்கசப்பு இருந்து வந்தது. இதனிடையே நாகசைந்தாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை மாதம் தனது சமூக வலைத்தளத்தில் அவருடைய பெயரை மாற்றினார்.

திருமணத்திற்கு பின்னர் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனியை தனது பெயருடன் இணைத்து கொண்ட சமந்தா ஜூலை மாதம் சமூக வலைதளங்களில் எஸ் என்று பெயரை மாற்றி வைத்தார்.

சமந்தாவுக்கும் – நாகசைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறு பாடு உள்ளது இருவரும் பிரிகிறார்கள் என்று பல ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தன. இருந்தாலும் இருவரும் இது தொடர்பாக மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக மவுனம் காத்து வந்தனர். ஆகஸ்ட் மாதம் நாகர்ஜூனாவின் பிறந்தாளுக்கு டுவிட்டதில் வாழ்த்தும் தெரிவித்தார் சமந்தா இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

தற்போது இது குறித்து நடிகர் நாகசைதன்யா இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது:- நீண்ட நேர ஆலோசனைக்கு பின்னர் கணவன் மனைவியாக உள்ள நானும் நடிகை சமந்தாவும் பிரிந்து தனித்து செல்ல முடிவு செய்துள்ளோம். பத்து வருடங்களுக்கு மேல் நல்ல நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு.

இப்படி ஒரு கடினமான நேரத்தில் நண்பர்கள், நலன் விரும்பிகள், ஊடகங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version