News

தி மேமிலி மேன் 2 வெப் தொடருக்கு மன்னிப்பு கேட்ட சமந்தா !

Published

on

கடந்த ஜூன் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 தொடர் வெளியானது இதில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த தொடர் வெளியான போது இலங்கைத் தமிழர்களையும் விடுதலைபுலிகளையும் பற்றி தவறாக இதில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டுக்கள் எழுந்தன. தமிழக அரசு, மற்றும் சில கட்சிகள் இந்த வெப்தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசியம் கோரிக்கை மனுவும் கொடுத்தது ஆனாலும் அவைகளையெல்லாம் மீறி இந்த வெப் தொடர் வெளியானது.

தற்போது இந்த வெப்தொடர் தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகள் டப்பிங் செய்து வெளியாகியுள்ளது. இப்போது இது குறித்து பேட்டி ஒன்றில் சமந்தா கூரியதாவது:-

ரசிகர்களுக்கும், மக்களுக்குமென இருக்கும் அந்த ஒரு சொந்தக்கருத்தை நான் அனுமதிக்கிறேன் மதிக்கிறேன், அவர்கள் கூறும் அந்தக்கருத்தில் தொடரும் பட்சத்தில் அடுத்தவர்களின் சென்டிமென்ட்டை நான் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் எதையும் வேண்டுமென்றே செய்தேன் என்று என்னை அவர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக என் மனமார்ந்த மன்னிப்பை அவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.என்னை அறியாமல் நான் யார் மனதையும் காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.

வெளியாக முன்னர் இருந்த எதிர்ப்பு வெளியான பின்னர் நின்றுவிட்டது. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. சிலர் அவ்வளாவு ஒன்றும் மோசமாக இல்லை என்று சொன்னதையும் பார்த்தேன்.இன்னும் தங்களின் கருத்தை தொடரும் மக்களுக்கு எனது மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். இந்த மன்னிப்பை முன்னரே கேட்டு இருக்கலாமோ.

Trending

Exit mobile version