Connect with us
 

News

நயன்தாரா விழகியது பற்றி ஷாருக்கான் படக்குழு விளக்கம் !

Published

on

பிகில், தெறி படங்களை தொடர்ந்து பிரபல இயக்குநர் அட்லி ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படம் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர்.

நயன்தாராவின் முதல் இந்தி படமாக இது அமைகிறது என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். மும்பையில் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில்தான் ஷாருக்கான் மகனான ஆர்யன்கான் போதை பொருள் வழக்கில் கைதானதால் படப்பிடிப்பை ரத்து செய்தார் ஷாருக்கான். கடும் மன உளைச்சலில் உள்ள ஷாருக்கான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தாமதம் ஆகிறதாம்.

இதனால் நயன்தாரா இப்படத்திற்காக ஒதுக்கிக்கொடுத நாட்கள் அனைத்தும் வீனாகியுள்ளதாம். இதன் காரணமாக நயன்தாரா இப்படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ள படக்குழு நயன்தாரா இப்படத்திலிருந்து விலகுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தியே. நயன்தாராதான் கண்டிப்பாக நடிப்பார் தற்போது பட வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தனர்.