News

முதல் நாளில் மட்டும் ரூ.8 கோடி வசூல் செய்த மாநாடு !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாநாடு. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துதான் இப்படம் கடைசி நேரத்தில் ஒரு வழியாக வெளியானது. வெளியான நேரத்திலிருந்து மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்றை விட இன்று பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பல திரையரங்குகள் மற்ற திரைப்படங்களை விடுத்து மாநாடு படத்துக்கு முன்னுரிமை கொடுத்து திரையிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மாநாடு திரைப்படம் நேற்று வெளியான ஒரே நாளில் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் வெளியாகி முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களில் பட்டியலில் மாநாடு திரைப்படத்திற்கு 5-வது இடமாம்.

Trending

Exit mobile version