Connect with us
 

News

ஹீரோவாக அறிமுகமாகும் பாடகர் சித் ஶ்ரீராம் !

Published

on

இயக்குநர் மணிரத்ணம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான கடல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுற்கு பிண்ணனி பாடகராக அறிமுகமானவர் சித் ஶ்ரீராம். அத பின்னர் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவான ‘ஜ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்னோடு நீயிருந்தால்’ என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இன்று பல காதல் பாடல்கள் இவரின் குரலில் வெளிவந்து ஹிட் அடித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சிறந்த பின்னணி பாடருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் சிறந்த பாடகராக வலம் வருகிறார். தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் சித் ஶ்ரீராம் நடிகராக அறிமுகமாகபோவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஜெயமோகன் திரைக்கதை எழுதிருக்கும் இந்த படத்தில் சித் ஶ்ரீராம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.