Connect with us
 

News

மீண்டும் ஆண் குழந்தைக்கு தாயானார் சௌந்தர்யா ரஜினிகாந்த் !

Published

on

நடிகர் Rajinikanth இரண்டாவது மகள் செளந்தர்யாவிக்கு கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபரான அஸ்வின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு செளந்தர்யா ரஜினிகாந்திற்கும் நடிகர் விசாகனுக்கு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து இவர்களுக்கு தற்போது ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு வீர் என்று பெயர் வைத்துள்ளோம் என்று மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளார் செளந்தர்யா.