News

சுந்தர்.சி நடிப்பில் தலைநகரம் இரண்டாம் பாகம் உருவாகிறது !

Published

on

இயக்குநர் சுந்தர்.சி படத்தின் நாயகனாக அறிமுகமான திரைப்படம் தலைநகரம். இயக்குநர் சுராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுக்கொடுத்தது.அதற்கு முக்கிய காரணம் வடிவேலுவின் நகைச்சுவையும் காரணம். இப்படத்தின் காமெடி காட்சிகள் இன்று வரையில் பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தின் தொடர்ச்சி பாகமாக நகரம் என்ற திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் வி.இசட்.துரை இயக்கி வருகிறார். இப்படத்திலும் சுந்தர்.சி அவர்களே நாயகனாக நடித்து வருகிறார். இன்று பொங்க திருநாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version