Connect with us
 

News

தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவம்தான் சூர்யா 40 படம்?

Published

on

சூர்யா நடித்து வரும் 40-வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்து வைக்கப்பட்டு அடுத்த மாதம் மீண்டும் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்த ஒரு முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஒரு திரைப்படம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக இந்த படம் எடுக்கப்படுவதாகவும். இப்படத்தில் சூர்யா பெண்களுக்காக போராடுபவராக நடிக்கிறாராம். கண்டிப்பாக பொள்ளாச்சியில் நடந்த சில உண்மை சம்பவங்களை இயக்குனர் பாண்டிராஜ் இப்படத்தில் வைத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் இது உண்மைக்கதைதான் என்பதை படக்குழு இன்னும் உறுதி படுத்தவில்லை.