News

சூர்யா 41 படப்பிடிப்பு நடக்கும் கிராமமக்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் சூர்யா !

Published

on

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவின் 41-வது திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்புக்காக அங்கு சில வீடுகள் கட்டப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த வீடுகளை படப்பிடிப்பு முடிவடைந்ததும் அங்கு வீடு இல்லாமல் வசிக்கும் குடும்பத்திற்கு வழங்க சூர்யா முடிவு செய்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் அந்த கிராமத்தில் வீடு இல்லாமல் வசிக்கும் ஏழை எழிய குடும்பத்திற்கு புதிய வீடு கட்டி தருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளாராம் சூர்யா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending

Exit mobile version