Connect with us
 

News

அடுத்த இரண்டு படங்களிலும் இரட்டை வேடத்தில் சூர்யா !

Published

on

சூர்யா ஏற்கனவே பேரழகன், மாற்றான், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

தற்போது சூர்யா நடிக்கும் இரண்டு படங்களில் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் தந்தை மகனாக இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். அந்த படத்திலும் இரட்டை வேடம் என்கிறது சினிமா வட்டாரம்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை தொடர்ந்து சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க சிவா சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.