News

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !

Published

on

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

சூர்யாவுடன் இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் பலர் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது.

இந்தநிலையில்தான் இயக்குநர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தை விரைவில் முடிக்க உதவியாக இருந்த சூர்யா ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ் அது மட்டுமில்லாமல் எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து இனி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version