News

காதுகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் – அஜித் குமார் !

Published

on

நடிகர் அஜித் குமார் இயக்குநர் வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படம் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார் Ajith Kumar. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில் Ajith Kumar அவர்களின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் Ajith Kumar பகிர சொன்னதாக ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ‘காதுகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அன்புடன் அஜித் குமார்’ என்று பதிவிட்டுள்ளார். காதுகளில் அடிக்கடி சத்தம் வந்தால் காது கேட்கும் திறனை இழக்கக்கூடும் என்ற விளக்கத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். அஜித் குமார் இந்த அக்கறை பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version