Connect with us
 

News

வில்லியாக மிரட்ட வரும் நடிகை அஞ்சலி !

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. சமீப காலமாக இவருக்கு பட வாய்புகள் குறைந்து வருகிறது. இளம் நடிகர்கள் இவரை தங்கள் படங்களில் கதா நாயகியாக ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள்.

இதனால் கதாநாயகி வேடம் வேண்டாம் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வந்துவிட்டார் அஞ்சலி. இயக்குநர் ஷங்கர் தற்போது ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இதில் அஞ்சலி முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு வில்லி வேடம் என்று கூறப்படுகிறது.

கதை மிகவும் பிடித்து விட்டதது அதனால் வில்லியாக நடிக்க ஒப்புக்கொண்டேன் என்கிறார் அஞ்சலி. இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கும் ஒரு படத்திலும் வில்லியாக நடிக்க அஞ்சலியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறார்.