News

இரண்டு வருடங்களுக்கு பின்னர் தமிழ் படத்தில் சாய் பல்லவி !

Published

on

மலையாளத்தில் பிரேம் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி அதற்கு பின்னால் இவருக்கு பட வாய்ப்புக்கள் குவிய ஆரம்பிந்தன. ஆனாலும் தன் மனதுக்கும் தான் ஏற்று நடிக்கும் கதாப்பாதிரத்துக்கும் வலிவான கதை இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் சாய் பல்லவி.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் தமிழில் தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே, தெலுங்கி சினிமாவிலும் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, ராணாவுடன் விராட பருவம், நானியுடன் ஷியாம் ஷிங்க ராய், ஆகிய மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது புதிதாக பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லவ் ஸ்டோரி மற்றும் விராட பருவம் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு வர தயாராகவுள்ளது.

தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான என்.ஜி.கே படத்துக்கு பின்னர் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை சாய் பல்லவி. முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். இந்த நிலையில் இரண்டு வருட இடைவேளிக்கு பின்னர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்தில் சாய் பல்லவி தமிழில் நடிக்கவிருக்கிறார். இவருடன் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் தொழிநுடப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Trending

Exit mobile version