News

சாய் பல்லவியின் சினிமா அனுபவங்கள் !

Published

on

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சாய்பல்லவி. பெரிய நடிகர்கள் ஜோடியாகவும் நடிக்கிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் அமைகின்றன.

தனது சினிமா அனுபவங்கள் குறித்து சாய்பல்லவி அளித்துள்ள பேட்டி கூறியதாவது:- ரவுடி பேபி பாடல் வைரலாகி சாதனை படைத்து வருகிறது. இதற்கு இந்த அளவுக்கு பாராட்டு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.பிரேமம் படத்தில் நடித்த பிறகு நிறைய சவால்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவு செய்தேன்.என்.ஜி.கே படத்தில் செல்வராகவன் எனக்கு நடிப்பு கற்றுக்கொடுத்தார்.

நடிப்பை உடலிலும் உணர்ச்சிகளை முகத்திலும் எப்படி வெளிக்காட்ட வேண்டும் என்பதை ஒரு ஆசிரியர் போல எனக்கு சொல்லிக்கொடுத்தார் செல்வராகவன்.அவரிடம் இருந்து நடிப்பு சினிமாவை மற்றைய நிறைய நிஷயங்களை தெரிந்து கொண்டேன்.

நான் படப்பிடிப்பை முடித்த பிறகு சில கதாபாத்திரங்கள் என்னை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த கதாப்பாத்திரமாகவே என்னை நினைத்திக்கொண்டே இருப்பேன்.மேக்கப் போட எனக்கு பிடிக்காது. நான் எப்படி இருக்கிறேனே அப்படியே நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இயக்குநர்களும் அதை ஏற்றுக்கொண்டனர் என்று கூறினார்.

Trending

Exit mobile version