News

மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி !

Published

on

கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். முதல் இதனை மறுத்த வேடன் பின்னர் தவறை ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்களிடம் பன்னிப்பும் கேட்டார் முக நூல் பக்கத்தில்.
ஆனாலும் அவர் தவறை வெளிப்படையாக ஏற்கவில்லை என்று கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் வேடன் பதிவை தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், மரியான், ஆகிய படங்களில் நடித்த நடிகை பார்வதி லைக் செய்து விட பாலியல் குற்றவாளியை ஆதரிப்பதா என்று அவருக்கு எதிராக பலர் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

இது குறித்து நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் வேடன் மீது குற்றம் சாட்டிய பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேடனின் மன்னிப்பு பதிவு சரியானது அல்ல என்று பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்த்தும் எனது லைக்கை நீக்கி தவறை திருத்தி விட்டேன். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே நிற்பேன். எனது செயலால் பாதிக்கபட்டோர் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

Trending

Exit mobile version