Connect with us
 

News

விடாமல் ஷங்கருக்கு பிரச்சனை கொடுக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் !

Published

on

உலகநாயகனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த இயக்குனர் ஷங்கர். இடையில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக படம் முடங்கியது. இதனால் தெலுங்கில் ராம்சணை வைத்து புதிய ப்டமென்றை இயக்க தயாராகி வருகிறார். அதே சமயம் அந்நியன் படத்தை ரன்வீர் சிங்கை வைத்து ஹிந்தியில் எடுக்கவுள்ளார்.

இந்நிலையில்தான் இந்தியன் 2 படத்தை முடித்துக்கொடுக்காமல் வேறு படங்களை இயக்க கூடாது என்று தடை விதிக்கும்படி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த பிரச்சனையில் இரு தரப்புக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வியில்தான் முடிந்தது.

தற்போது இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஐதராபாத் ஐகோர்ட்டிலும் லைகா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் நடிகர் ராம்சரனை வைத்து ஷங்கர் இயக்கவுள்ள தெலுங்கு படத்துக்கு சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.