Connect with us
 

News

சமந்தாவைத்தான் சித்தார்த் குத்திக் காட்டுகிறாரா?

Published

on

நடிகை சமந்தா தனது காதல் கணவரான நாகசைதன்யாவை விவாகரத்து செய்து விட்டார் என்ற செய்திதான் நேற்றிலிருந்து தீயாக பரவி வருகிறது. இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்று பலர் ஆராய்ந்து வரும் நிலையில் சமந்தாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு தரப்பு பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

நாகசைதன்யாவை காதல் செய்வதற்கு முன்னர் சமந்தா நடிகர் சித்தார்தை காதலித்ததாக ஒரு செய்தி அந்த காலகட்டத்தில் பேசப்பட்டது. அதற்கு ஆதாரமாக இருவரும் சேர்ந்து விழாக்களுக்கு செல்வது என பல விழாக்களிலும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்தார் சமந்தா அதில் நடித்த போதுதான் நாகசைதன்யாவுடன் காதல் வசப்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் இருவரும் சுமூகமாக பிரிவதாக இருவரும் நேற்று அறிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது:- ஏமாற்றுபவர்கள் ஒரு போதும் செழிப்பாக இருக்கவே மாட்டார்கள் என்பது நான் சிறு வயதில் ஆசிரியரிடம் கற்ற பாடங்களில் ஒன்று என்று கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவை சித்தார்த் பதிவிட்டுள்ளதால் கண்டிப்பாக சமந்தாவைதான் மனதில் வைத்து இப்படி பதிவிட்டுள்ளார் என்று அவரை அனைவரும் விமர்சித்து வருகிரார்கள்.