News

பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கு கனல் கண்ணன் கைது !

Published

on

சில மாதங்களுக்கு முன்னர் பெரியார் சிலையை உடைப்பேன் என திரைப்பட சண்டைப்பயிற்சி மாஸ்டர் Kanal Kannan பேரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஶ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள்தான் இந்துக்களில் எழுச்சி நாளாக இருக்கும் எனவும் கூறினார்.

மேலும் இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில் கைதுக்கு பயந்து Kanal Kannan தலைமறைவானார்.

இந்த நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் சார்பில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கனல் கண்ணன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதால் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த Kanal Kannan -னை சென்னை குற்றப்பிரிவு காவல்துறைவினர் இன்று கைது செய்தனர்.

Trending

Exit mobile version