Connect with us
 

News

பாகுபலி வெப் தொடரில் நயன்தாரா?

Published

on

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் பாகுபலி 3-ம் பாகம் வெப் தொடராக தயாராக உள்ளது. பாகுபலி படத்தில் வரும் ராஜமாதா சிவகாமி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடர் தயாராகவுள்ளது என்றும் பாகுபலி முதல் பாகத்துக்கு முன்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கிதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது இந்த நிலையில் பாகிபலி அடித்த பாகத்தின் வெப் தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாக வெளியாகியுள்ளது. கதை பிடித்துள்ளதால் நயன்தாரா நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.

படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த தொடர் அடுத்த வருடம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகயுள்ளது. காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.