Connect with us
 

News

தற்கொலைக்கு அவர்தான் காரணம் நடிகை மீரா மிதுன் !

Published

on

தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளும் குற்றம் சாட்டி வந்தவர் நடிகை மீரா மிதுன். தற்போது இவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மீரா மிதுன் ட்வீட் செய்துள்ளார். ஒரு ஆண் எப்பொழுதும் என்னை பின்தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேலாக டார்ச்சர் செய்து, என் வாழ்க்கையை கட்டுக்குள் வைப்பது பாலியல் தொல்லை ஆகும். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று மீரா தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர் கூறியிதாவது:-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அஜித் ரவியின் அமைப்பை விட்டு விலகினேன். அந்த அமைப்புக்காக நான் வேலை செய்து, அழகிப் பட்டம் வென்றேன்.

அஜித் ரவி செய்த அநீதியால் அந்த அமைப்பை விட்டு விலகி என் சொந்த அமைப்பை உருவாக்கினேன். அஜித் ரவி என் பெயரை கெடுத்துவிட்டார். என் மீது போலி வழக்குகள் தொடர்ந்தார். சைபர் புல்லியிங் செய்தார். தன் அதிகாரம் மற்றும் பணத்தை வைத்து எனக்கு பிரச்சனைகள் கொடுத்தார்.

அவர் என்ன செய்தாலும் அதில் இருந்து நான் மீண்டு வந்தேன். அவர் என்னை பின்தொடர்கிறார், என் வேலையை கெடுக்கிறார், என் ப்ராஜெக்டுகள் ரிலீஸாவதை தடுக்கிறார், என் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்.

3 ஆண்டுகளாக அவர் என்னை டார்ச்சர் செய்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் கிரிமினல்களை வைத்து கொடுமைப்படுத்துகிறார். அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. ஆனால் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.

ஷூட்டிங் மற்றும் இந்த துறையில் ஜொலிப்பதே என் விருப்பம். ஆனால் அஜித் ரவியால் நான் பிரச்சனைகளை எதிர்கொள்வதால் மன அழுத்தத்தில் இருக்கிறேன்.

தற்கொலை தான் எனக்கு இருக்கும் ஒரே வழி. என் தற்கொலைக்கு அஜித் ரவி மட்டும் தான் காரணம்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் போன்று நான் இறந்த பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும். இது தற்கொலை அல்ல கொலை என்று தெரிவித்துள்ளார்.