News

திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்த நயன்தாரா !

Published

on

நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நாணும் ரவுடிதான் படப்பிடிப்பிலிருந்து 6 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வாழ்கிறார்கள்.

இருவரையும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவுகள் செய்து வருகிறார்கள். சமீபத்தில் ரசிகர் ஒருவர் நயன்தாராவை எப்போது திருமணம் செய்வீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு திருமணத்துக்கு பணம் சேமித்துக்கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்று எப்போது போகும் என்று காத்துக்கொண்டிருக்கிறேன் என்று பதில் கொடுத்தார் விக்னேஷ் சிவன்.

இதன் மூலம் கொரோனா ஓய்ந்ததும் அவர்கள் திருமணம் நடக்கும் என்று பேசப்படுகிறது.இந்த நிலையில் நயன்தாராவின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி நயன்தாராவை வற்புறுத்துவதாகவும் குடும்பத்தினர் நிர்ப்பந்தம் காரணமாக நயன்தாராவும் திருமனத்துக்கு சம்மதித்து விட்டதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த சில மாதங்களில் நயன்தாரா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா தற்போது அண்ணாத்த, நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Trending

Exit mobile version