Connect with us
 

News

தன் ரசிகர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தளபதி விஜய் !

Published

on

மறைந்த முதலமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைந்து 2016-ல் விஜய் முதலமைச்சர் ஆவார் என்றும் 2021-ல் உள்ளாட்சி மற்றும் 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இது மிகவும் பரபரப்பானது. இதையடுத்து விஜய் ஒப்புதலோடு அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாலர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சமீபகாலமாக இயக்கத்தை சேர்ந்தவர்கள் சில ஆர்வ மிகுதியால் அல்லது ஆர்வக்கோளாறால் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்தும் அவர்களது படங்களை விஜய் படத்துடன் இணைத்தும் அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கிய போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

ரசிகர்கள் மற்றும் இயக்கத்தினரின் இந்த செய்கைகளை விஜய் அவர்களின் அனுமதியோடு நான் கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் கூறியுள்ளேன்.

இருப்பினும் இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபடுவது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இதுபோன்ற செயல்களை விஜய் என்றும் விரும்புவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிரேன். எனவே இப்படிப்பட்ட விஷயங்களை இனியும் தொடரும் பட்சத்தில் விஜய்யின் அனுமதி பெற்று இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதி விஜய் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.