News

விஜய்யின் வரிவிலக்கு மேல்முறையீட்டை ஏற்றது ஜகோர்ட் !

Published

on

வெளிநாட்டுலிருந்து இறுக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோடி நடிகர் விஜய் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து நடிகர்கள் நிஜ வாழ்கையிலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை தீர்ப்பு நகலின்று விசாரணைக்கு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் கோரிக்கை ஏற்று வழக்கை தீர்ப்பு நகலின்றி பட்டியலிட உத்தவிட்டுள்ள நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Trending

Exit mobile version