Connect with us
 

News

தளபதி விஜய்யின் கார் சர்ச்சை வதந்திக்கு முற்றுப்புள்ளி !

Published

on

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முதல் ஆளாக வந்து தனது வாக்கினத் பதிவு செய்தார் நடிகர் தளபதி விஜய்.நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் தளபதி. அங்கு தனது சிகப்பு நிற மாருது சுசுகி செலிரியோ காரில் வருகை கொடுத்தார் விஜய் அவர்கள்.

இதை பார்த்த விஜய்யை பிடிக்காத சில ரசிகர்கள் ஏன் குறிப்பாக அஜித் ரசிகர்கள் விஜய்யின் கார் காப்பீட்டு காலம் முடிந்து விட்டதாகதும் அதை முதுப்பிக்காமல் வந்துள்ளார் என்று சர்ச்சை கிளப்பு விட்டனர்.

இந்த சர்ச்சை பேச்சுக்கு விஜய்யின் மக்கள் தொடர்பாளரான ரியாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரியாஸ் விஜய்யின் அந்த குறிப்பிட்ட காரின் காப்பீட்டு விபரங்களை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். அந்த காப்பீட்டு விபரங்கள் அடங்கிய தாளில் காரின் காப்பீட்டு காலம் வருகிற மே மாதம் 28, 2022 வரை இருப்பதாகவும் குறிப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.