Connect with us
 

News

படப்பிடிப்பின் போது செலவழித்த நேரங்கள் என் வாழ்க்கையில் மிக அழகானவை – அருண் விஜய் !

Published

on

சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் நடிகர் அருண் விஜய் அவருடைய தந்தை நடிகர் விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஓ மை டாக்’ வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளையும் அவைகளின் பாசத்தையும் சித்தரிக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் பற்றி அருண் விஜய் கூரியதாவது:- ஒரு நாய் குட்டிக்கும் குழந்தைக்கும் இடையேனா புரிதலை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் என்பவர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

நான், அப்பா விஜயகுமார், என் மகன் அர்னவ் விஜய் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்துள்ளோம். தாத்தா, தந்தை, பேரன் ஆகிய மூன்று பேரின் நிஜமான உறவுகளை திரையிலும் நீங்கள் பார்க்கலாம்.

இப்படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம் தமிழ் திரையுலகில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. எங்களால் மறக்க முடியாத அனுபவம். ஊட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது என் தந்தை மற்றும் மகனுடன் கழித்த் நேரங்கள் என் வாழ்க்கையில் மிக அழகானவை என்று அருண் விஜய் கூறினார்.